திண்டுக்கல், ஜூலை 29- மணிப்பூர் போன்ற சம்பவம் எந்த நாட்டிலும் நடைபெறவில்லை. ஆனால் இதுகுறித்து ஒன்றுமே தெரி யாதது போல் பிரதமர் நடந்து கொள் வது வேதனையளிக்கிறது என்று திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் பி.தாமஸ் பால்சாமி கூறினார். மணிப்பூர் மாநிலத்தில் கலவரச் சம்பவங்களை தடுக்காமல் வேடிக் கைப் பார்க்கும் ஒன்றிய-மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டில் சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயர் பி. தாமஸ்பால்சாமி மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி ஆகியோர் உரையாற்றினர். ஆயர் தாமஸ் பால்சாமி பேசுகை யில், பாஜகச் சார்ந்தவர்கள் அனை வருக்கும் நாங்கள் கண்டனம் தெரி விக்கிறோம். மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் பிரதமர் ஒன்றும் தெரியா தது போல நடந்து கொள்வது நம்மை யெல்லாம் வேதனைக்குள்ளாக்கு கிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மணிப்பூரில் நடைபெறும் இத்தகைய அநீதியானது எந்த நாட்டி லும் நடைபெறவில்லை. மணிப்பூர் அரசு தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது. எனவே மணிப்பூர் அரசு தார்மீக பொறுப்பேற்று ராஜி னாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சி கள் சொல்வது போல மத்தியில் ஆளும் பாஜக அரசும் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார். கே.பாலபாரதி பேசுகையில், ‘‘இரண்டு பெண்களை நிர்வாணப் படுத்தி மக்கள் இருக்கக்கூடிய தெருக்கள் வழியே இழுத்துச் சென்றி ருக்கிறார்கள். இதை விட இந்திய நாட்டுக்கு தலைகுனிவான காரியம் இருக்க முடியாது. இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியான பிறகு தான் பிரதமர் மோடி வாய் திறந்தி ருக்கிறார். என் இதயம் துடிக்கிறது என்கிறார். இதயம் எல்லோருக்கும் துடிக்கத் தான் செய்யும். ஆனால், அந்த இதயத் துடிப்பு நின்று போனால் நீங்கள் சவமாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட ஒரு சவமாக பாஜக ஒன்றிய அரசும் பிரதமர் மோடி யும் வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கின்றனர்’’ என்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அருட்தந் தையர்கள் சாம்சன், பிலிப் சுதாகர், ஆர்.சச்சிதானந்தம் (சிபிஎம்), துரை. மணிகண்டன் (காங்கிரஸ்), இரா.வீர பாண்டி(தி.க), கே.ராஜாங்கம் (சிபிஐ), என்.செல்வராகவன் (மதி முக), துரை.சம்பத் (த.பெ.தி.க), வ. கல்யாணசுந்தரம் (சிறுபான்மை மக் கள்), யாழ்.புலேந்திரன் (தி.இ.த), ரோக்கஸ் வளவன் (விசிக), க. பாண்டியன் (பு.இ.மு), கே.எஸ்.கணேசன் (மக்கள் ஒற்றுமை மேடை) உள்பட பலர் கலந்து கொண்டனர். (ந.நி.)