நாகர்கோவில், மார்ச் 27- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில், 75-ஆவது சுதந்திர தின விழா ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா’ நான்காம் நாள் நிகழ் வாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், வீராங்கனை கள், பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் விழிப்புணர்வு சைக் கிள் பயண நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை யில் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்க ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாகர்கோவில் மாநகர மேயர் ரெ.மகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிர சாத் ஆகியோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்திலி ருந்து துவங்கி, பார்வதிபுரம், வெட்டூர்ணிமடம், வடசேரி பேருந்து நிலையம், அண்ணா விளை யாட்டு அரங்கம், வேப்பமூடு, செட்டிக்குளம் வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த பயணம் நிறைவடைந்தது. விழிப்புணர்வு சைக்கிள் பய ணம் மேற்கொண்ட அனைவருக் கும் அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 92 வயது முதியவர் விழிப்பு ணர்வு சைக்கிள் பயணம் மேற் கொண்டதற்காக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாராட் டினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் பு. அலர்மேல்மங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (பொது) மா.வீராசாமி, நாகர் கோவில் வருவாய் கோட்டாட்சி யர் க.சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல், மாணவ, மாணவியர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.