விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர், நுகர்வோர் நீதிபதி சேகர் தலைமையில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உறுப்பினர்கள் கே.சௌந்தரராஜன், சாந்தி ஆண்டியப்பன், கலசலிங்கம் தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரி மாணவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநிலத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.