இராஜபாளையம், ஜூன் 15- இராஜபாளையம் சிஐடியு டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பதினோரா வது ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா நடை பெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர் வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன் வரவேற்றார். இராஜ பாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சிஐடியு மாவட்ட செயலா ளர் பி.என்.தேவா, மாவட்ட தலைவர் எம். மகாலட்சுமி ,மாவட்ட உதவித்தலைவர்கள் எம். திருமலை, ஜி.கணேசன், நகர கன்வீனர் எம்.சுப்பிரமணியன், சங்க உதவி தலைவர் ஜே.விஜயகுமார் உள்பட சங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சங்க உறுப்பினர் முபாரக் அனைத்து குழந்தைகளுக்கும் ஊக்கப் பரிசு வழங்கினார்.