காரியாபட்டி, ஏப்.7- காரியாபட்டி அருகே பாறைப் பத்தி கிராமத்தில் விவசாயி களின் நிலத்தை சிலர் போலியாக பத்திரப் பதிவு செய்திட முயற்சி செய்வதாக கூறி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் சார் பதி வாளர் அலுவலகம் முன்பு மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர். விருதுநகர் மாவட்டம், காரி யாபட்டி அருகே உள்ள மாங் குளம் குரூப் மொச்சிபத்தி கிரா மத்திற்குட்பட்ட பகுதியில் பாறைப் பத்தி விவசாயிகளின் நிலங்கள் உள்ளன. இவற்றை சென்னை யைச் சேர்ந்த பேச்சிமுத்துப்பிள்ளை என்பவர், கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு போலியாக பத்தி ரப் பதிவு செய்தார். எனவே, பத்திரப் பதிவை ரத்து செய்திடக் கோரி காரியாபட்டி சார் பதிவாளரிடம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. பின்பு பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட் டன. இதையடுத்து, அந்தப் பதி வானது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பேச்சிமுத்துப் பிள்ளையின் வாரிசுதாரராக உள்ள சில நபர்கள், மீண்டும் அதே நிலங்களை போலியாக பத்திரப் பதிவு செய்ய முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் காரியாபட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. அதில், மீண்டும் விவசாயிகளின் நிலத்தை பத்தி ரப் பதிவு செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் விவசாயி கள் சங்க நிர்வாகிகள் அம்மாசி, குமராண்டி, மலைச்சாமி, சதுர கிரி, பாக்கியம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.