districts

img

கோவில் நிலங்களில் வசிப்போரை வெளியேற்றும் முயற்சியைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டிச.29-  கோவில் நிலங்களில் வசிப் பாரை, ஆக்கிரமிப்பாளர்கள் என  கூறி வெளியேற்றும் இந்து சமய  அறநிலையத்துறையின் நடவ டிக்கையைக் கண்டித்து அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் சங்கம் சார்பாக டிசம்பர் 29  அன்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்போர்டு வாரி யம் உள்ளிட்ட அனைத்து சமய  நிலங்களில் வசிப்போர், வியா பாரிகளுக்கான வாடகை பாக்கி யை கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதற்கும் ரத்து செய்ய வேண்டும். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான கட்ட டங்களில் சிறு குறு வணிகர்களுக் கான வாடகையை சந்தை மதிப் பீட்டின்படி நிர்ணயம் செய்யாமல் வணிக நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு வாடகை நிர்ண யம் செய்ய வேண்டும்.

கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை எளிய வாடகை தாரர்களை வரன்முறைப்படுத்தும் போது வாழ்வாதார நிலையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அற நிலையத்துறை தேவையற்றது என்று தவறான பிரச்சாரங்கள் மேற்கொண்டு கோவிலையும் அதன் சொத்துக்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர  துடிக்கும் மதவெறி அமைப்பு களை தடுக்க வேண்டும். காலம் காலமாக கோவில்  நிலங்களில் மறு ஏலம் என்ற அடிப்படையில்  சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்  ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்து வோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திண்டுக்கல் அறநிலையத் துறை உதவிஆணையர் மற்றும்  இணை ஆணையர் அலுவலகங் கள் முன்பாக நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு சங்கத்தின் மாநி லக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.தயாளன் முன் னிலை வகித்தார். கம்பம் நகர குடி யிருப்போர் நலச்சங்க செயலா ளர் ஆர்.கணேசன் கோரிக்கை களை விளக்கி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலை வர் என்.பெருமாள் ஆதரித்துப் பேசினார்.  விவசாயிகள் சங்க மாநில  துணைச்செயலாளர் டி.கண்ணன்  நிறைவுரையாற்றினார்.