மதுரை, ஆக.1- பெண்கள் மற்றும் பொதுமக் கள் மீதான கொடூரத் தாக்குதலை தடுக்கத் தவறிய மணிப்பூர் பாஜக அரசைக் கண்டித்தும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தீதி கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி. மனிதச் சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 2 ஆம் பகுதிகுழு சார்பில் மேல வாசல் பகுதி நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு பகுதிகுழு உறுப்பினர் எஸ்.மோகன் தலைமை வகித்தார். மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், பகுதிக்குழு செயலா ளர் பி.ஜீவா, மாவட்டக்குழு உறுப்பி னர் பி.கோபிநாத் ஆகியோர் பேசினர். தெற்கு பகுதிக்குழு சார்பில் அனுப்பானடி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற கண்டன பேர ணிக்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் அ. ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . பேரணி யின் நிறைவாக அனுப்பானடி தீய ணைப்பு நிலையம் அருகில் நடை பெற்ற கண்டனக் கூட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் ஏ. லாசர் உரை யாற்றினார். வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் மீனாம்பாள்புரம் - குல மங்குளம் மெயின் ரோட்டில் நடை பெற்ற கண்டன கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் கல்யாணசுந்த ரம் தலைமை வகித்தார். பகு திக்குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், பி. சுகந்தி ஆகியோர் பேசினர்.
மேலூர்
மதுரை புறநகர் மாவட்டம் மேலூர் தாலுகாக்குழு சார்பில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் எஸ்.பி. மணவாளன் தலைமை வகித்தார். மேலூர் தாலுகாச் செயலாளர் எம். கண்ணன் துவக்கி வைத்துப்பேசி னார். ஆர்.சி.சபை அருட் தந்தை அந்தோணி பாக்கியம், தாலுகா குழு உறுப்பினர் பி.எஸ்.ராஜா மணி, தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் துணைத் தலை வர் என்.பழனிச்சாமி, ஆகியோர் பேசினர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா நிறைவுரை யாற்றினார். இதில் கட்சியின் தாலு காக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மனிதச்சங்கிலி
மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம் ஏ. ஏ. ரோட்டில் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற்றது. பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை சின்னதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். கிறிஸ்தவர்கள், மத்திய - 1 ஆம் பகுதிக்குழு சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
தம்பிபட்டி
வத்திராயிருப்பு அருகே தம்பி பட்டி கிராமத்தில் அனைத்துக்கட்சி களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி அகமது காசிம் தலைமை தாங்கி னார். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பி னர் ஜெயக்குமார் ,ஒன்றிய செயலா ளர் பெனரி விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் சிபிஐ கிளைச் செயலாளர் முரு கன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணாதுரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பிரியதர்ஷினி ஆகியோர் பேசினர்.
கண்டரமாணிக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டாரமாணிக்கத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், தாலுகா குழு செயலாளர் ஆறுமுகம், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாக்கிய லட்சுமி, பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் வேணு கோபால் ஆகியோர் பேசினர்.