தேனி, ஜன.4- தேனி மாவட்டம் போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வானியல் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்க தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியை ஜி.சந்திரகலா செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் சூரிய நிழல் கடிகாரம், மழைமானி தயாரிப்பு மற்றும் செயல்படும் விதம் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் பாகைமானி, வெள்ளைத்தாள், உறிஞ்சுகுழாய், கவராயம் ஆகியவற்றின் மூலம் நிழல்கடிகாரம் செய்தனர்.