இராமநாதபுரம், ஜூன் 3- இராமநாதபுரம் நகர் வடக்கு திமுக சார்பில் நகர் கழக செயலாளரும் நகர் மன்ற தலைவருமான ஆர்.கே.கார்மேகம் ஏற் பாட்டில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்க ளில் திமுக கொடியேற்றப்பட்டது. பேருந்து நிலையம் அருகேவுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின் கலைஞரின் உரு வப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். முன்ன தாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். பேருந்து நிலையத்தில் 300 க்கும் மேற் பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப் பட்டது.