districts

img

காரைக்குடியில் கலைத் திருவிழா

சிவகங்கை, அக்.30- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவி யரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை  பண்பாட்டு இயக்ககம் சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது.  விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா  அஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்  துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தமிழ்நாடு இயல் இசை நாடக  மன்றம் / தமிழ்நாடு நாட்டுப்புற கலை ஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்தி ரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலைத் திருவிழாவில் பங்கேற்ற கலைக் குழுவினர்களுக்கு, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, தேவகோட்டை வரு வாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள்  அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர்  மன்ற துணைத் தலைவர் குணசேகரன், தமிழ்நாடு இயல், இசை, நாடக கலை ஞர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன், ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், வட்டாட்சியர் தங்கமணி நாடக கலைக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.