districts

img

கஞ்சா மொத்த வியாபாரி கைது விற்பனை-கடத்தல் குறையும்

தேனி, பிப்.6- தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களுக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாகக்  கஞ்சா விற்பனை செய்த மொத்த வியா பாரியைத் தேனி காவல்துறையினர் அதிரடி யாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே  உள்ள திம்மரசநாயக்கனூர் காவல்துறை சோதனைச் சாவடியில் கடந்த மாதம் 16-ஆம் தேதி கருவாடு ஏற்றி வந்த லாரியை  நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரி யில் கருவாடு கூடைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,200 கிலோ கஞ்சா வைப் பறிமுதல் செய்து கடத்தி வந்த  மூன்று பேரை ஆண்டிப்பட்டி காவல்துறை யினர் கைது செய்தனர். விசாரணையில் கஞ்சா ஆந்திர மாநி லத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டத் திற்குக் கொண்டு செல்வது தெரியவந்தது. தேனி மாவட்டத்தில் 1,200 கிலோ கஞ்சா பிடிபடுவது இதுவே முதல் முறை என்ப தால் காவல்துறையினர்,

கஞ்சா கடத்தலின் பின்னணி குறித்து விசாரணை நடத்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமை யில் தனிப்படை அமைத்து தேனி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நடவடிக்கை மேற்கொண்டார். தனிப்படை காவல்துறையினர் விசா ரணையில் கஞ்சா கடத்தலுக்கு மூளை யாகச் செயல்பட்ட நபர் ஒடிசா மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்த னர். ஒடிசா மாநில காவல்துறை உதவி யுடன், ஒடிசா மாநிலம் துப்புலவாடா பகுதி யைச் சேர்ந்த கிருஷ்ணகாந்த பல்லாவ் (52) என்பவரைக் கைது செய்து ஆண்டி பட்டிக்கு அழைத்து வந்தனர். தொடர் விசா ரணைக்குப்பின் பல்லாவ் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். இது தொடர்பாகச் செய்தியாளர் களைச் சந்தித்துப் பேசிய காவல் கண்கா ணிப்பாளர் பிரவீன்உமேஷ் டோங்ரே, “மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும்  கடத்தலில் ஈடுபட்ட 40 பேர் குண்டர்  தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு  அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள் ளது. கஞ்சா கடத்தல் சம்பவத்தைத் தடுக்  கக் காவல்துறையினர் தீவிரமாகப் பணி யாற்றுகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு மாநிலங்களுக்குக் கஞ்சா கடத்த லுக்கு மூளையாகச் செயல்பட்டவர் தேனி  மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இனிவரும் காலங்க ளில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் குறையும் என்றார்.