சின்னாளப்பட்டிஏப்.21 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூ ராட்சியின் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் பிரதீபா கனக ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆனாந்தி பாரதிராஜா வரவேற்றார். கூட்டத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக ரித்து வரும் குப்பைகளை அகற்றி முறைப்படுத்த கூடுதல் குப்பை கிடங்கு அமைக்க புறநகரில் இடமி ருந்தால் ஆய்வு செய்து விலை கொடுத்து வாங்க முடிவு செய்தும், கோடைகாலத்தில் சித்திரை திருவிழா காலம் என்பதால் நகரில் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கு வதை கண்காணிக்க தனிக்குழு, வெயில் அதிகம் காரணமாக தூய்மைப்படுத்துதல் அதிகாலை யிலே துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தலைமை எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.