மதுரை, ஜன.10- தீக்கதிர் மதுரை பதிப்பில் பணி நிறைவுபெற்ற ஊழியர்களுக்கு பாராட்டு விழா ஜனவரி 9 திங்களன்று அலுவலகத்தில் நடைபெற்றது. விளம்பரப் பிரிவு மேலாளர் ஆர்.உமாபதி, கணினி பிரிவு பொறுப்பாளர் வி.பாண்டி, செம்மலர் இதழ் துணை ஆசிரியர் சோழ.நாகராஜன், லேஅவுட் பிரிவு சங்கரலிங்கம் ஆகியோர் பணிநிறைவுபெற்றனர். இவர்களின் பணியைப் பாராட்டி நடைபெற்ற விழாவிற்கு தீக்கதிர் பொது மேலாளர் ஜோ. ராஜ்மோகன் தலைமை வகித்தார். ஆசிரியர் மதுக்கூர் ராமலிங் கம், முன்னாள் ஆசிரியர் வி.பரமேசு வரன், முதன்மை பொதுமேலாளர் என். பாண்டி, பொறுப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், அகில இந்திய விவசா யத்தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. லாசர், தேனி மாவட்ட மூத்த தலைவர் கே.ராஜப்பன் ஆகியோர் பாராட்டி உரையாற்றினர். பணிநிறைவு பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர். செய்தி ஆசிரியர் ப. முருகன் நன்றி கூறினார். இதில் ஊழியர்கள் மற்றும் பணிநிறைவுபெற்றவர்களின் குடும் பத்தினர் பங்கேற்றனர்.