நத்தம்,சுஜூன் 23- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வீரசின்னம்பட்டி மற்றும் மருநூத்து ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் கள் எடுத்த மாணவ.மாணவி யர்களுக்கும் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்க ளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வளர்மதி, அல்லி ஜோன் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்ட தலைவர் சிலம்பரசன், மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகேஷ், மாவட்ட செயலாளர் ஜே.தீபக் ராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இந்நிகழ்ச்சி யில் ஊராட்சி மன்ற தலை வர் தங்கவேல், ஆசிரியர் கள், வாலிபர் சங்க மாவட்ட துணை செயலாளர் பிரேம் குமார்,ஒன்றிய பொருளாளர் தங்கபாண்டி,குமார், மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற னர்.