சென்னை, ஏப்.25- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராக மதுரையைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவ ரான எஸ்.மகபூப்ஜான் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் மறுமலர்ச்சி தொழிலா ளர் முன்னணியின் இணை பொதுச் செயலாளராகவும் செயல் பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பி னர்களாக க.இளவழகன், வழக்குரைஞர் கே.வி.மோகன சுந்தரம், கோவை.பெ.செல்வராஜ், வழக்குரைஞர் இரா.செந்தில்செல்வன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கெனவே உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்துள்ளார்.