மதுரை, மார்ச் 23- திருச்சி, குமார வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் பணி செய்து கொண்டி ருந்த பிரபு, ஜெயபாலன் ஆகிய பிராமணரல்லாத அர்ச்சகர்களின் நியமனங் களை ரத்து செய்த உயர் நீதி மன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல் முறை யீடு செய்ய கோரியும், கரு வறை தீண்டாமையை ஒழிக் கக் கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மதுரை புறநகர் மாவட்டக் குழு சார்பில் யா. ஒத்தக்கடையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் செ.ஆஞ்சி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு துவக்கி வைத்துப் பேசினார். முன் னாள் மாநிலக் குழு உறுப்பி னர் மா.கணேசன், மாவட்டச் செயலாளர் செ.முத்து ராணி, தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழு மாவட்ட அமைப்பா ளர் எம்.கலைச்செலவன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் பேசி னர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிறப்பு தலை வர் எஸ்.கே. மகேந்திரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் மகா லிங்கம் மற்றும் பலர் பங் கேற்றனர்.