districts

மதுரை முக்கிய செய்திகள்

மூணாறு வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒரு பெண் பலி

தேனி, ஏப்.23- கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்  கேற்பதற்காக  திருநெல்வேலி கே.டி.சி நகர், சண்முகா புரத்தில் இருந்து சனிக்கிழமை  வேனில் 21 பேர் வந்த னர். கேரளா எல்லையில் போடி மெட்டு அருகே தொண்டி மலை என்ற இடத்தில் செல்லும் போது, அங்குள்ள ஒரு  வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில்  பயணித்த பெருமாள் (59), வள்ளியம்மாள் (70) சுசீந்திரன்  (8) சுதா(20) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படு காயம் அடைந்த 17 பேர் ராஜாக்காடு பகுதியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல்  சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று  வந்த ஜானகி (55) என்ற பெண் நேற்று சிகிச்சை பல னின்றி  இறந்தார். இதன்மூலம் மூணாறு விபத்தில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. காய மடைந்த 16 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இன்று முதல் எஸ்.எஸ்.சி, சி.ஜி.எல் தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு

விருதுநகர், ஏப்.23- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்  எஸ்.எஸ்.சி, சி.ஜி.எல்  தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார்  7500 பணிக்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடை பெறவுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும்  தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் வரும் ஏப்ரல் 24 முதல்  நேரடியாக நடைபெறவுள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பு வோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில்  அணுகலாம்.   மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலை பேசி எண் 04562 - 293613 அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சலில் வேலைவாய்ப்பு அலுவல கத்தை தொடர்பு கொள்ளலாம்.   தேர்வுகளில் கலந்து கொள்வோர், www.ssc.nic.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப் பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் மே.,3 ஆகும். இப்போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்த கங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்  தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இப்போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகளும் ஆன்லைன் மூல மாக எழுதலாம் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லெண்ணெய், பாமாயில் விலை உயர்வு

விருதுநகர், ஏப்.23- விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு : கடந்த வாரம் 15 கிலோ நல்லெண்ணெய் டின் ஒன்றின் விலையானது ரூ.6435க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த  வாரம் டின் ஒன்றுக்கு ரூ.165 வரை உயர்த் தப்பட்டு தற்போது ரூ.6600க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் விலையானது கடந்த வாரம்  15 கிலோ ரூ.1510 என்ற விலைக்கு விற்கப்  பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.40  உயர்த்தப்பட்டு ரூ.1550க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை  உயர்வினால், எண்ணெய் பலகார விற்ப னையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மல்லி  40 கிலோ கடந்த வாரம் ரூ.3200க்கு  விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.200 குறைந்து தற்போது தற்போது ரூ.3ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ  நாடு வகையானது கடந்த வாரம் ரூ.12ஆயி ரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் மூட்டை ஒன்றுக்கு ஒரே வாரத்தில் ரூ/900 சரிவு ஏற்பட்டு தற்போது ரூ.11,100க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ. 10,500க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைவு  ஏற்பட்டு, தற்போது ரூ.10,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.