தேனி ,ஜூன்.5- கம்பம் அருகே சுற்றித்திரிந்த அரி கொம்பன் யானையை வனத்துறை யினர் திங்களன்று அதிகாலையில் மயக்கஊசி செலுத்திப் பிடித்தனர். பின்பு களக்காடு முண்டந்துறை வனப்பகுதிக்கு அரிகொம்பனை கொண்டு சென்றனர் . கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், தேவிகுளம், சாந்தன் பாறை வனப்பகுதியில் அரிகொம்பன் அதிக நாட்கள் இருந்தது. பல உயிர்க ளைக் காவு வாங்கிய இந்த யானையை இடமாற்றம் செய்ய கேரள வனத்துறை யினர் முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஏப்.29-ஆம் தேதி இந்த யானைக்கு மயக்கஊசி போட்டு தமிழக எல்லையான பெரியாறு புலி கள் காப்பகம் முல்லைக்கொடி எனும் வனப்பகுதியில் விட்டனர். முன்னதாக இதன் நடமாட்டத்தைத் தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டது. கம்பம் நகரில் யானை இந்த யானை கண்ணகி கோவில் வழியே மேகமலை வனப்பகுதிக்குள் அடுத்தடுத்து நுழைந்தது. இதனால் மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பய ணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 27-ம் தேதி இந்த யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. இதைப்பார்த்தமக்கள் அலறியடித்து ஓடினர்.பாதுகாப்பு கருதி இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பா ளர் பிரவீன்உமேஷ்டோங்கரே, மேகமலை புலிகள் வன சரணாலய துணை இயக்குநர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, கூடலூர், கம்பம் வனச்சரகர்கள் முரளீதரன், அன்பு உள்ளிட்ட பல அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கம்பம் வாழைத் தோப்பில் இருந்த இந்த யானை மே 28-ஆம் தேதி மேகமலை வனப்பகு திக்கு இடம்பெயர்ந்தது. இதைத் தொ டர்ந்து யானை மீண்டும் நகருக்குள் வந்து விடாமல் தடுக்க வனத்துறை யினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த சில தினங்களாக சண்முகாநதி அணை நாராய ணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் யானை இடம்மாறிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் திங்களன்று அதி காலை எரசக்கநாயக்கனூர் அருகே பெருமாள்கோவில் பகுதிக்கு யானை வந்தது. இதைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் மயக்கஊசி செலுத்தி னர். பின்பு கும்கி யானைகள் மூலம் அதை வனத்துறை லாரியில் ஏற்றினர். பின்பு காமயகவுண்டன்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கம்பம் புறவழிச்சாலை வழியே யானை வனத் துறைக்குச் சொந்தமான லாரியில் கொண்டு செல்லப்பட்டது. இந்தயானைக்கு முன்னதாக பாது காப்பு வாகனங்களும், பின்னால் வனத் துறையினரின் வாகனங்களும் சென்றன. இதுகுறித்து வனத்துறையி னர் கூறுகையில், “இந்த யானை திருநெல்வேலிமாவட்டம் மாஞ் சோலை (அகத்தியர் மலை-ஊத்துக் குளி) வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் கூறுகையில், துதிக்கை மற்றும் உடலின் பல பகுதிக ளிலும் யானைக்கு சிறு காயம் உள்ள தால் உரிய சிகிச்சை அளித்த பிறகே வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றனர். தடை நீக்கம் அரிகொம்பன் யானை பிடிபட்ட தால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த 144தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார். -நமது நிருபர்