districts

img

தலித் மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கிய இடத்தில் குழி தோண்டி மணல் கொள்ளை லாரியை சிறைப்பிடித்த மக்கள்

வேடசந்தூர், ஜன.1-  வேடசந்தூர்  அருகே எரி யோட்டில் தலித் மக்களுக்கு வீடு கட்ட ஒதுக்கிய இடத்  தில் குழி தோண்டி மண் எடுக் கப்பட்டது. இதனால் பொக் லைன் இயந்திரம் மற்றும் லாரியை பொதுமக்கள் சிறைபிடிப்பு போராட்டம் நடத்தினர்.  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்  அருகே உள்ள  மீனாட்சிபுரம், பாண்டியன் நகர் மறவபட்டி, சித்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 368 ஆதி திராவிட மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக பண்ணைப்பட்டி செல்லும் சாலை அருகே 22 ஏக்கர்  நிலம் வீடு கட்டிக்கொள்வதற் காக கடந்த 2009 ஆம் ஆண்டு தனித்தனியாக பட்டா வழங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் வருவாய் துறையினர் பய னாளிகளுக்கு முறையாக  நில அளவீடு செய்து வழங்க வில்லை என்று கூறப்படு கிறது.  இந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு சிலர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 20 அடிக்கும் மேலாக  தோண்டி மண்கொள்ளை யில் ஈடுபட்டுள்ளனர்.  இது குறித்து பொதுமக் கள் வருவாய்த்துறை அதி காரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஆதிதிராவிட மக்கள் சனிக்  கிழமையன்று அந்த பகுதி யில் மண் கொள்ளையில் ஈடு பட்ட பொக்லைன் இயந்தி ரம்,  லாரியையும் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு எரி யோடு போலீசார் விரைந்து வந்து பொக்லைன் இயந்தி ரம் மற்றும் லாரியையும் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.