தூத்துக்குடி,அக். 31 தூத்துக்குடியில் குருஸ் பர்னாந்து மணிமண்டபத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மாநகராட்சியின் அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிஅவசரக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலை மையில் ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை யில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் குருஸ் பர்னாந்துக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு ரோச் பூங்கா பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடம் ஒதுக்குப்புறமாக இருப்பதால் மாநகர மையப் பகுதியில் அமைக்கப்பட வேண்டு மென்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அறிவுரையின்படி நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்சாலையில் உள்ள எம்ஜிஆர் பூங்காவில் 20 சென்ட் இடம் கிழக்கு பகுதியில் ஒதுக்கப்பட்டு அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநக ராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் குருஸ் பர்னாந்து மணிமண்டபம் இட ஒதுக்கீட்டிற்கான தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அதுபோல் உள்ளாட்சி அமைப்பு களில் நகர்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நகர்புற உள்ளாட்சி செயல் பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்ட வளர்ச்சிப்பணிகளை செயல் படுத்த ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் ஒருநபரை வார்டு குழு உறுப்பினராக பகுதி சபா உறுப்பினர்கள் தேர்வு உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. குருஸ் பர்னாந்து மணிமண்டபத்துக்கு இடம் ஒதுக்கும் தீர்மானம் நிறைவேற்றியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி வர வேற்று நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலை வர்கள், செயற்பொறியாளர் , உதவி செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் கவுன்சிலர்கள், மேயரின் நேர்முக உதவியாளர், ஆணையரின் நேர்முக உதவி யாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.