இராமநாதபுரம், ஜூன் 24- இராமநாதபுரம் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் மாவட்ட மாநாடு ஜூன் 22 அன்று ஏஐடியுசி மாவட்ட தலை வர் எஸ்.பி.ராதா தலைமையில் நடை பெற்றது. எல்பிஎஃப் மாவட்ட கவுன்சில் செய லாளர் எஸ்.வின்சென்ட் அமலதாஸ் துவக்கி வைத்துப் பேசினார். ஏஐடி யுசி மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன், சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.சந்தா னம், ஐன்டியுசி மாவட்ட செயலாளர் குப்பு சாமி, தலைவர் கண்ணன், எல்பிஎஃப் சார்பில் அழகப்பன் ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார். ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 3 வரை, நகராட்சி களில் நடைபயணம், ஒன்றிய பகுதி களில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடத்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.