“தென் மாவட்டங்களில் உள்ள ஒரே கூட்டு றவு சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் ஆலையை இயக்குவோம் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண் டும். இந்த ஆலையின் நிர்வாகச் சீர்கேட் டிற்குக் காரணம் அதிமுக அரசு தான் என்ப தையும் முதல்வர் அறிவார். அதிமுக செய்த தவறுக்காக தொழிலாளர்களையும், விவ சாயிகளையும் வஞ்சிக்கக்கூடாது. ஆலைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து அர வையை தொடங்க உத்தரவிட வேண்டும். ஆலையில் போதுமான கட்டமைப்பு வசதி யும் உள்ளது”. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி அலங்காநல்லூர் ஆலையைத் திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலங்காநல்லூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு பேசி யுள்ளார். இந்த நிலையில தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு ஆலை யை இயக்கத் தேவையான முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்ய ஒரு அரசு ஒரு கமிட்டி அமைத்தது. அந்தக் கமிட்டி, ஆலை யை இயக்க ரூ.26 கோடியே 50 லட்சம் நிர்வாக ரீதியாக தேவைப்படுகிறது; ஆலை யின் அரவை பகுதிக்குள் குறைந்தபட்சம் அரவை காலத்திற்கு ஒரு லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து தமிழக அரசுக்கும் ஆய்வ றிக்கை சமர்ப்பித்தது. இந்தநிலையில், பிப்ரவரி 10 அன்று மத்திய சர்க்கரைத்துறை ஆணைய தலை மைப் பொறியாளர்கள், தமிழ்நாடு கூட்டு றவு சர்க்கரை ஆலைகளின் தலைமைப் பொறியாளர் பிரபாகரன் தலைமையில் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மேலாண்மை இயக்கு னர் செந்தில்குமாரி முன்னிலையில் ஆலை யின் இயந்திரப் பகுதிகளை ஆய்வு செய்த னர். ஆய்விற்குப் பின் ஆலையை இயக்கு வதற்கு தேவையான அனைத்து வசதி களும் உள்ளது. இயந்திரத்தில் பெருமளவு பிரச்சனை இல்லை. இயந்திரப் பராமரிப் பிற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.11 கோடியே போதுமானது. ஆலையை இயக்கிவிடலாம் எனக் கூறியிருக்கின்றனர். ஆனால் கரும்பு மட்டும் பற்றாக்குறை யாக உள்ளது. விவசாயிகள் ஆலையின் அரவைக்குத் தேவையான கரும்புகளை ஆலை நிர்வாகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றனர்.
கரும்பு உற்பத்தி
ஆலை இயக்கப்படும் என உறுதியான சூழல் எழுந்துள்ள நிலையில், ஆலை நிர்வாகம், கரும்பு பெருக்கு அலுவலர்களை வட்டாரம் வாரியாக நியமித்து கரும்பு பயி ரிடுவதை ஊக்குவிக்கவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் ஆய்வு 2023-2024-ஆம் ஆண்டு ஆலை இயங்கும் என்பதை உறு திப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் “டேக் (கரும்பு) டைவர்ஷன்... டேக் (கரும்பு) டைவர்ஷன்” என்று கூறி, கரும்பு விவசாயி களை வேறு ஆலைகளுக்கு திருப்பிவிட்ட னர். அலங்காநல்லூர் ஆலையில் இனி அந்த நிலை ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற் பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஆலையை இயக்கு வதன் மூலம் 10,000 கரும்பு விவசாயிகள், 500 தொழிலாளர்களும் நேரடியாகப் பயன் பெறுவார்கள். கரும்பு கொண்டு செல்லப் பயன்படும் லாரி, டிராக்டர், மாட்டு வண்டி ஓட்டுபவர்களும், அதைச் சார்ந்த தொழிலா ளர்கள், வணிகர்கள் என ஆயிரக்கணக்கா னோர் மறைமுகமாகவும் பயன் பெறுவார் கள்.