districts

img

பின்தங்கிய மக்களின் கல்விக்காக அனைத்து செல்வங்களையும் வழங்கியவர் அழகப்பர்

சிவகங்கை, அக்..7- பின்தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சிக் காக தான் ஈட்டிய அனைத்து செல்வங்க ளையும் செலவிட்டவர் அழகப்பர் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்ககழக துணைவேந்தர் ரவி புகழாரம் சூட்டினார்.  காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் முதுகலை முதலாமாண்டு அறி வியல் துறைகளை சேர்ந்த மாணவர்க ளுக்கான புத்தாக்க பயிற்சி பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலைய ரங்கத்தில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு தலைமையேற்று துணைவேந்தர் ரவி பேசுகையில், ஆரம்பக் கல்வி முதல் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி வரை காரைக்குடி யில் நிறுவி காரைக்குடியை கல்விக்குடி யாக மாற்றியவர்தான் அழகப்பர். .1985 ஆம் ஆண்டு அழகப்பா  பல்கலைக்கழ கம் நான்கு துறைகளோடு ஆரம்பிக்கப் பட்டது.  தற்போது 44 துறைகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  45 கல்லூரிகள் அழகப்பா பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளதாக உள்ளது.  அழ கப்பா பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் தலைசிறந்த ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்டு, பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த் துள்ளனர்.  மாணவர்கள் அழகப்பா பல்க லைக்கழகத்தை பயன்படுத்தி தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகத்தில் பணி யாற்றிய பேராசிரியர்கள் 9 பேர் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்க ளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் அழகப்பா பல்கலைக் கழகத்திலேயே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் இங்கு நிலவக்கூடிய சிறந்த ஆராய்ச்சி மற்றும் உயர்கல்விச் சூழல் ஆகும் என்று கூறினார்.  முன்னதாக பல்கலைக்கழக பதிவாளர் ராஜமோகன் வரவேற்று பேசினார். தேர்வாணையர் கண்ணபிரான், ஆராய்ச்சி பிரிவின் முதன்மையர் மூர்த்தி, ராக்கிங் தடுப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை ,முனைவர் பாஸ்கரன், திறன் மேம்பாட்டு மைய இயக்குநர் வேதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனிச்சாமி நன்றி கூறினார்.