சிவகங்கை, டிச.4- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்க லைக்கழக திறன் மேம்பாட்டு நிறு வன தொழில் முனைவோர் புத்தாக் கம் -தொழில் முனையம், அழகப்ப பல்கலைக்கழக நிறுவனங்களின் புத்தாக்கம் மன்றம் ஆகியவற்றின் சார்பில் தொழில் முனைவோர் சந்திக் கும் பல்வேறு சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ற தலைப் பில் இரண்டு தினங்கள் பயிற்சி பட் டறை நடைபெற்றது. இதில் அழகப்ப பல்கலைக் கழக துணைவேந்தர் ரவி தலைமை யேற்று உரை நிகழ்த்தினார். அவர் உரையில், தமிழக அரசின் முக்கிய குறிக்கோள் தமிழக தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்குவது. அதற்காக இத்திட் டத்தினை அழகப்பா பல்கலைக்கழ கம் சிறப்பாக செயல்படுத்தி வரு கிறது. அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு நிறுவனத்தில் அமை யப் பெற்றுள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி சிறந்த தொழில் முனை வராக தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை மனித குல மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் நடைமுறையில் பயன்படுத்தும் வகையிலும் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களின் தொழில் மேம்பாட்டு நடவ டிக்கைக்காக அழகப்பா பல்க லைக்கழக இணைப்பு பத்து கல்லூரி களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் காசோலைகள் சம்பந்தப்பட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளிடம் துணைவேந்தர் ரவி வழங்கினார் .காரைக்குடி மென்பொருள் ஆய்வகத்தை சேர்ந்த நாகப்பன் ,பழ னியப்பன் ஆகியோர் பேசினர். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் வேதிராஜன் வரவேற்று பேசினார். வேலை வாய்ப்பு பிரிவின் துணை ஒருங்கி ணைப்பாளர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.