districts

img

ஆண்டிபட்டி அருகே நூறு நாள் வேலை கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம்

தேனி, ஆக.10- ஆண்டிபட்டி அருகே வேலை அட்டை உள்ள அனைவருக்கும் நூறு நாள்  வேலை கேட்டு அகில இந் திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் போராட் டம் நடைபெற்றது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே கன்னியப்ப பிள்ளைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேலை அட்டை வைத்துள்ள பெரும் பாலான நுறு நாள் வேலை தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை .1500-க்கும் மேற்பட்ட பெண்  கள் வேலை செய்ய தயார்  நிலையில் உள்ளனர் . வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பணி ஒதுக்க வேண்டும் ,வாரம் தோறும் கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி குப்பாம்பட்டியில் போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் நிர்வாகி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எல்.ஆர் .சங்கரசுப்பு ,மாவட்ட துணைத் தலை வர் கே.தயாளன், சுப்புரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சம்பவம் குறித்து அறிந்த தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று  அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதி அளித்தனர்.அத னைத் தொடர்ந்து போராட் டத்தை ஒத்திவைத்தனர்.