மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். சூழ்நிலைக்கேற்ப பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.