மதுரை, பிப்.28- அனைத்துப் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து விவசாய தொழி லாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், சிஐடியு சார்பில் திங்களன்று மாநிலந் தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாடாளுமன்றத்தில் ஒன்றிய மோடி அரசு சமர்ப்பித்துள்ள 2022-23ம் ஆண்டிற் கான நிதிநிலை அறிக்கையில் உரமானியம், பயிர்க்காப்பீடு, பி.எம் கிசான் ஆகியவற்றிற் கான நிதி ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டப்பட்டுள்ளதைக் கண்டித்தும், விவ சாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை பற்றி அறிவிப்பு இல்லாததை கண்டித்தும், கிராமப்புற வேலை வாய்ப் பினை பாதுகாக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.2 லட்சம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக் குழு சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.தெய்வராஜ் தலைமை வகித்தார். விதொச மாநிலத் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர், விவ சாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், சிஐடியு புறநகர் மாவட்டச் செய லாளர் கே.அரவிந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.லூர்து ரூபி, புறநகர் பொருளாளர் ஜி.கௌரி, விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் ஏ.அடக்கி வீரணன், விதொச மாவட்டத் தலைவர் வி.உமா மகேஸ்வரன், மாவட்டச் செயலாளர் சொ.பாண்டியன், மாவட்டப் பொருளாளர் ஜி.காசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பழனி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வேல் ரவுண்டானா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய தொழிலா ளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.அருள் செல்வன், விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் பி.செல்வராஜ், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் கே.பிச்சைமுத்து ஆகியோர் தலைமை தாங்கினார். விதொச மாவட்ட தலைவர் பி.வசந்தா மணி, விச மாவட்டச் செயலாளர் என்.பெரு மாள், ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் பி.சின்னச்சாமி, விதொச ஒன்றியச் செயலாளர் எம்.முருகசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் டி.துரைசாமி, ஒன்றிய துணை செயலாளர் ஆர்.தண்டபாணி, சிஐடியு நிர்வாகிகள் சோ.மோகனா, ஆர்.ஈஸ்வரன், சி.பெரியசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலை வர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் முத்துராமு, விதொச மாவட்ட தலைவர் தண்டியப்பன், மாவட்ட செயலாளர் மணியம்மா, மாவட்ட தலைவர் வீரய்யா, மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்கருப்பன், பொது தொழிலாளர் சங்கத் தின் பொதுச் செயலாளர் வெங்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரைக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அழகர் சாமி, விதொச மாவட்ட துணைச் செய லாளர் வேணுகோபால், கல்லல் ஒன்றியத் தலைவர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி
தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எம் .இராமச்சந்திரன் தலைமை வகித்தார் . ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் சங்க மாநில குழு உறுப்பினர் கே . ராஜப்பன் தொடக்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விதொச மாவட்ட செயலாளர் ஏவி. அண்ணா மலை , விவசாயிகள் சங்க மாவட்ட செயலா ளர் டி.கண்ணன் ஆகியேரர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி. முருகன், மாவட்ட பொருளாளர் ஜி .சண் முகம், பி.பிச்சைமணி ,பி .முருகேசன், எஸ். பொம்மையன் பி சந்திரசேகர், விதொச நிர்வாகி சி . வேலவன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஜெயராஜ் ,எம்.வி.முருகன் மற்றும் இ.தர்மர், சு. வெண்மணி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர்
திருவில்லிபுத்தூர் அய்யனாபுரம் பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.முருகன் தலைமை தாங்கினார். விதொச ஒன்றியச் செயலளார் எம்.கே.பழனிச்சாமி விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஆர்.சோமசுந்தரம் நிறைவு செய்து பேசினார். இதில், சிபிஎம் ஒன்றிய செயலாளர் முனியாண்டி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட நிர்வாகி வீர சதானந்தம் தலைமை தாங்கி னார். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட பொதுச்செய லாளர் திருமலை, தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாராள், விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் மணிக்குமார், விதொச மாவட்ட செய லாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட பொரு ளாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் விளக்கிப் பேசினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜூனன் நிறைவு செய்து பேசினார். இதில் கட்சியின் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.குருவேல், விவசாய சங்க மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மயில்வாகனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி கணேசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் இ.கண்ணகி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.