districts

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி ரூ.90 லட்சத்தை பறித்துச்சென்ற கொள்ளைக்கும்பல்

ஒட்டன்சத்திரம், ஜூன் 28-  வேடசந்தூர் அருகே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக கூறி அழைத்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.90 லட்சத்தை பறித்துக்கொண்டு காரை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய கரூர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.  ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வங்கிகள் மூலம்  திரும்பப் பெறப்பட்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  திருப்பூரைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் வைத்திருக்கும் தொழில்அதிபர் ஷாஜகான் ரூ. 1 கோடி அளவில் ரூ 2 ஆயிரம் நோட்டுக்  கள் வைத்திருப்பதாகவும், அந்த நோட்டுக் களை வங்கியில் மாற்றுவதற்கு சட்ட சிக்கல் உள்ளதால் பணத்தை மாற்ற முடியாமல் தவித்து வந்துள்ளார்.  இதையறிந்த கரூர் ஆண்டால்கோவில் தெருவைச் சேர்ந்த  ராஜசேகர், அதே பகுதி யைச் சேர்ந்த குணசேகரன் ஆகியோர் கரூ ரைச் சேர்ந்த தனக்கு தெரிந்தவரிடம் கமிஷன் கொடுத்தால் மாற்றி தருவதாக கூறி யிருந்தனர்.  கரூரைச் சேர்ந்த சக்திவேல்(வயது 55) என்பவர் 2 ஆயிரம் நோட்டை மாற்றி 500 ரூபாய் நோட்டுக்களாக நாங்கள் தருகிறோம் என்று தொழில்அதிபர் ஷாஜகான் உள் ளிட்டோரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. அதை நம்பி நேற்று முன்தினம் மாலை தனது காரில் ரூ 90 லட்சம் மதிப்புள்ள 2 ஆயி ரம் ரூபாய் நோட்டுக்களை ஒரு சூட்கேசில் வைத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி  கொண்டமநாயக்கனூரிக்கு வந்த னர். உடன் ராஜசேகர், குணசேகரன் ஆகி யோரும் வந்தனர்.  

அங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதியில் நின்றிருந்த சக்திவேல் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலிடம் ரூ 90  லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்  களை தொழில்அதிபர் ஷாஜகான் உள் ளிட்டோர் வழங்கினர்.  அதை பெற்ற சக்திவேல் உள்ளிட்ட 9 பேர்  கொண்ட கும்பல் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரி வாள்களை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து, தொழில்அதிபர் ஷாஜகான் உள்ளிட்ட 3 பேர் வைத்திருந்த அனைவரின் செல்போன்களை பறித்துக்கொண்டனர். இதனையடுத்து சக்திவேல் கும்பல் அந்த காரையும், செல்போன்களையும், தாங்கள் வந்த காரையும் எடுத்துக்கொண்டு புறப்பட்ட னர். இதனையடுத்து தொழில்அதிபர் ஷாஜ கான்  உள்ளிட்ட 3 பேர் வந்த காரை சக்திவேல்  கும்பல் பறித்துக்கொண்டு அந்த காரில் அங்கி ருந்து தப்பிச்சென்றுவிட்டனர். அங்கிருந்து தப்பி தொழில் அதிபர் ஷாஜ கான் உள்ளிட்ட 3 பேர் எரியோடு காவல் நிலை யத்திற்கு வந்து நடந்த விபரங்களை கூறி புகார் அளித்தனர்.  இது குறித்து எரியோடு காவல் ஆய்வா ளர்  வேலாயுதம், சார்பு ஆய்வாளர் கலையர சன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரூ.90  லட்சம் பணம் மற்றும் காரை பறித்துச்சென்ற கரூரைச் சேர்ந்த சக்திவேல் உள்ளிட்ட 9 பேர் காரில் தப்பிச்செல்லும்போது சாலை யோரங்களில் கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரக்களில் பதிவான காட்சி களையும், அதே போல் அந்த கும்பல் பயன்  படுத்திய செல்போன் சிக்னல் எங்குள்ளது என்  பது குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் எரியோடு அருகே உள்ள புளியம்பட்டி - கூம்பூர் சாலையில் புதுக்  கோட்டை அடுத்து சாலையோரம் தொழில்அதி பர் ஷாஜகானிடம் இருந்த பறித்த காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் சக்திவேல் கும்பல் தப்பிச்சென்றுவிட்டனர். எரியோடு போலீசார் அந்த காலை கைப்பற்றினர். எரியோடு காவல் நிலை யத்திற்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாஸ்கரன்,  வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்க்காதேவி ஆகியோர் நேரில் வந்து பணத்தை பறிகொடுத்த தொழில்அதிபர் ஷாஜகான் உள்ளிட்ட 3 பேரிடம்  விசாரணை நடத்தினர்.