பள்ளிபாளையம், பிப்.26- பள்ளிபாளையத்தில் கூலி உயர்வு கேட்டு போராடி வரும் விசைத்தறி தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை, சார்ந்து ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசைத்தறி கூலி தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு என்பது ஏற் படவில்லை. இந்நிலையில், விசைத் தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக் கும் 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர், கடந்த 6 மாதங்களாக பல்வேறு இயக்கங்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்து வந்தனர்.
மேலும், சேலம் தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அடுத்த டுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், பிப்.27 ஆம் தேதி யன்று (இன்று) வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் அறி வித்தது. இதுகுறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு தயாராகி வந்த நிலையில், ஞாயிறன்று பெரியகாடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில், விசைத்தறி ஜவுளி உரிமையா ளர்கள், விசைத்தறி தொழிற்சங்க நிர் வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை யானது நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக மூன்று சதவிகித கூலி உயர்வு வழங்குவது, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள், விசைத்தறி கூலி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது, அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டுமென விசைத்தறி ஜவுளி உற் பத்தியாளர் தரப்பில் கோரிக்கை விடுக் கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சிஐ டியு தொழிற்சங்க தலைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் கூலி உயர்வு பேச்சுவார்த் தையில் சமூகத்தீர்வு ஏற்படுத்த வேண் டும், என்றனர். அதனடிப்படையில் திங் களன்று (இன்று) நடைபெறவிருந்த விசைத்தறி தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.