இராமநாதபுரம் ஆட்சியர் எச்சரிக்கை இராமநாதபுரம், ஜூன் 29- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலை வர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதி யில்லாமல் செயல்பட்டு வரும் மேற்கண்ட சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறு வனங்கள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை யில் பதிவு செய்து கொள்ள பத்திரிகை செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்நாள் வரை சுற்றுலாத்துறை யில் பதிவு செய்யாமல் பல சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வரு கிறது. அதன்படி இராமநாதபுரம் மாவட்டத் தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மேற் கண்ட சுற்றுலாத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்க உள்ள சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் www. tntourismtors.com என்ற இணைய தளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் பதிவு செய்து கொள்ள அறிவு றுத்தப்படுகிறது. பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவ னங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நட வடிக்கை மேற்கொள்ளப்படும். வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் முழு கூடுதல் பொறுப்பு, மாவட்ட சுற்றுலா அலுவலகம், இராமநாதபுரம் மாவட்டம் (இ) இராமேஸ்வ ரம் இமெயில் முகவரி to.rameswaram@gmail.com தொலைபேசி எண்: 04573-221371, 9176995871 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.