districts

img

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திடுக!

மதுரை, பிப்.21- மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தி யம்) அலுவலகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் வ. இந்திராணி தலைமையில் செவ்வாயன்று நடை பெற்றது.  முகாமில் சொத்து வரி, பெயர் மாற்றம் தொடர்பாக  12 மனுக்களும், சொத்து வரி  திருத்தம் தொடர்பாக 36 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், குடிநீர் குழாய் இணைப்பு மற்றும் புதிய பாதாளச்சாக்கடை இணைப்பு வேண்டி 27 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 7 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 2  மனுக்களும், இதர கோரிக்கை வேண்டி 1 மனுவும் என மொத்தம் 87 மனுக்களை பொது மக்களிடமிருந்து மேயர் நேரடி யாக பெற்றுக்கொண்டர்.  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டது. இம்முகா மில் சொத்து வரி பெயர் மாற்றம் வேண்டி  விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடி அனுமதி ஆணையினை மேயர் வழங்கி னார். இம்முகாமில் துணை மேயர் தி.நாக ராஜன், துணை ஆணையாளர் முஜிபூர்  ரகுமான், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர் மனோ கரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வ ரன், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக் கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.