districts

அறிவியல் கல்லூரியில் மாணவர் களுக்கான கல்விக் கடன் சிறப்பு முகாம்

திருவில்லிபுத்தூர் கனரா வங்கி மூலம் பிள்ளையார்குளம் கிராமத்தில் பாலகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் களுக்கான கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர், எம். ரங்கசாமி தலைமையில், கல்லூரி முதல்வர் அருண், மண்டல துணை வட்டாட்சியர், தனம், பிள்ளையார்குளம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், ஜோதி ஆகியோர் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் கள் உடனான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.