கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் புதனன்று (பிப்.9) கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.வீராசாமி தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இதில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தே.திருப்பதி உட்பட பலர் பங்கேற்றனர்.