மதுரை தூங்கா நகரம் என்றாலே அனைவருக்கும் நினை வுக்கு வருவது இரவு நேர தெருக்கடை கள், ஓய்வறியா உழைக்கும் மக்கள், சாலை எங்கும் வீசும் காரசார உணவு களின் வாசம். இவை அனைத்தும் மதுரை மண்ணின் பரபரப்பு சூழலை எடுத்துக் காட்டும். இவ்வாறு பரபரப்பாக இருக்கும் மதுரையில் கோரிப்பாளை யம் மக்கள் அதிகம் கூடும் இடமாக கருதப்படுகிறது. இந்த கோரிப்பாளை யத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேக ரால் துவங்கி வைக்கப்பட்டது ‘ட்ரான்ஸ் கிச்சன்’ என்னும் உணவகம். இது பன்னி ரண்டு திருநங்கையர் தங்களது பத்து ஆண்டிற்கான கேட்டரிங் அனுபவத்தின் அடிப்படையில் ஒரு குழுவாக, குடும் பமாக இணைந்து ஜெயசித்ரா என்பவ ரின் தலைமையில் நடத்தப்பட்டு வந்த உணவகமாகும். ‘ட்ரான்ஸ் கிச்சன்’ என்பது லாபத்திற் காக மட்டும் இயங்கும் ஒரு உணவக மாக இல்லாமல், குறைந்த அளவி லான மக்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்துத் தரும் இடமாகவும், முதி யவர், எளியவர் என அனைவரும் பசி யாறும் ஒரு உணவகமாகவுமே கருதப் பட்டது. அதாவது இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குதல், இல வசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், அதுமட்டுமின்றி அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் இருந்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ற வாறு வீட்டு சமையல் தரத்தில் உண வளித்தல். இவ்வாறு இருக்கையில், பொதுமக்களின் பாராட்டும், ஆதரவும் வெவ்வேறு ஊர்களில் இருந்தும், நாடு களில் இருந்தும் இந்த உணவகத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இது ஒதுக்கப் பட்ட மக்களின் சமூக அங்கீகாரத் திற்கான புதியதொரு தொடக்கமாகவும் தென்பட்டுள்ளது.
அந்த பன்னிரண்டு திருநங்கை யருள் ஒருவரான தலைவர் ஜெயசித்ரா விடம் வெவ்வேறு துறைகளில் படித்த வர்கள் இருந்த போதும், தாங்கள் சமை யல் துறையை தேர்வு செய்ததற்கான காரணம் பற்றி கேட்டபோது, “சாப் பாட்டுக்காக நான் பட்ட கஷ்டங்கள் நிறைய. பசி ரொம்ப கொடுமையானது. நான் பட்ட மாதிரி வேறு யாரும் கஷ்டப் படக் கூடாதுன்னு நெனச்சேன். அதுக் காக தான் இது எல்லாமே” என்கிறார். தொடர்ந்து வெற்றிகரமாக, பல போராட்டங்களையும் எதிர்கொண்டு நடத்தப்பட்டு வந்த ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவகம் நிதிப் பற்றாக்குறையாலும், ஆதரவாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டாத காரணத்தினாலும் வங்கி களின் கடன் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டமையாலும் முடங்கியது. தொட ர்ந்து ஒரு ஆண்டு ஐந்து மாதம் ஜெய சித்ரா தலைமையிலான திருநங்கையர் பன்னிரண்டு பேர் கொண்ட குழுவால் நடத்தப்பட்டு வந்த அந்த உணவகத் திற்கு முற்றுப் புள்ளி இடப்பட்டது.
பின்னர் வேறு ஒருவரின் கைகளுக்கு மாற்றப்பட்டது. அன்றைய முற்றுப் புள்ளி உணவ கத்திற்கு மட்டுமே. அன்று அவர்களின் சிந்தனைக்கோ, விடா முயற்சிக்கோ, மனிதம் நிறைந்த குணத்துக்கோ முற்றுப்புள்ளி இட இயலாது என்பதை உணர்த்தும் விதமாக தனது கேட்ட ரிங் தொழிலை தொடர்ந்து வெற்றிகர மாக செய்து வருகின்றனர். இந்த பன்னி ரண்டு பேர் கொண்ட திருநங்கையர் குழு, கேட்டரிங் சர்வீஸ் மட்டுமின்றி முதியோர் இல்லம், எச்ஐவி மற்றும் தொழு நோயால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தை களுக்கு இன்றளவும் தம்மால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அது போக கண்தானம், இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தி யில் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் ஜெயசித்ராவிடம் கூம் போது, “எங்களுக்கு கஷ்டங்களோ, சவால்களோ, ஒன்னும் புதுசு கிடை யாது. நெறைய போராட்டங்கள பாத்துட்டு தான் இங்க வந்துருக்கோம். அதுனால இந்த தோல்வியெல்லாம் நம்மள ஒன்னும் மூழ்கடிச்சுறாது. எங்க ளுக்கு போதுமான நிதி உதவியும், ஆதரவாளர்களின் கூடுதல் ஆதரவும் கிடச்சா கிச்சன் மாதிரியே அந்த ஓராண்டு வெற்றிப் பயணத்தை தொடர் வெற்றிப் பயணமா எங்களால மாத்தி வெற்றிகரமா இயக்க முடியும். மக்க ளின் ஆதரவோடு. மேலும் இதன் மூலம் எங்களை போன்ற திருநங்கையர் களுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தரு வது மட்டுமின்றி அவர்களின் வாழ்வா தாரம் உயர இதுபோன்ற மாற்றங்கள் தான் வழிவகுக்கும்” என்ற நம்பிக்கை வார்த்தைகள் மூலம் தனது வேண்டு கோளை முன்வைத்தார்.
- கண்மணி தங்கராஜ்