21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் மதுரை புதூர் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார். சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ,அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க சம்மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.