மதுரை மாநக ரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் முருகேசன் 28.12. 2022 இரவு 62 வய தில் அகால மர ணம் அடைந்துள் ளார். அவரது மரணச் செய்தி, மதுரை யில் கட்சித் தோழர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. 1980 காலங்களில் கட்சிக்கு வந்தவர். செல்லூர் வட்டா ரத்தில் முன்பிருந்த அருள்தாஸ்புரம் கமிட்டி உறுப்பினராக சிறப்பாக பணி யாற்றியவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் வடக்கு பகுதியில் தலைவராகவும், அதற்கு அடுத்து வாலிபர் அமைப்பின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இறக்கும் வரை தத்தனேரி மேல கைலாச புரம் ஏ.பி.பழனிச்சாமி கிளையின் செய லாளராக இருந்து வந்துள்ளார். 16 ஆண்டு காலம் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலு வலகத்தின் இரவுநேர ஊழியராக இருந்து வந்துள்ளார். கட்சித் தலைவர்கள் வெளியூரிலி ருந்து மதுரைக்கு வருகின்ற போது அவர் களை ரயில் நிலையத்திற்குச் சென்று தனது ஆட்டோவில் அழைத்து வருவதும், தலைவர்கள் பணியை முடித்து செல்கின்ற போது அவர்களை ரயில் நிலையத்தில் இறக்கி வழியனுப்புவதும் தனக்கான பணி யை செவ்வனே நேர்த்தியாக செய்து வந் தார். கட்சியின் மாவட்ட அளவிலான பெரும்பாலான பணிகளுக்கு கட்சியின் மாவட்ட தலைவர்களை இரவு, பகல் பாராது அழைத்த அடுத்த நிமிடத்தில் வந்து நிற்கக்கூடிய அற்புதமான தோழர் முருகேசன். கட்சியின் செயற்குழு, மாவட் டக்குழு, வெகுஜன அமைப்புக்களின் கூட்டங்களில் பங்கேற்கக்கூடிய தோழர் கள் ஒருவர் விடாமல் அனைவரையும் கவ னிப்பதில் அவரைப் போன்ற அர்ப்பணிப்பு மிக்க தோழரை பார்ப்பது அரிது. கூட்டங்க ளில் தோழர்களின் உடல்நிலை அறிந்து கனிவுடன் தேநீர் வழங்குவது, கூட்டங்க ளுக்கான உணவு ஏற்பாடுகளை பொருத்த மான நேரத்தில் செய்து பொறுமையுடன் பரிமாறுவது, வயது வித்தியாசமின்றி தன்னை விட 30 வயதுக்கு கீழ் உள்ள தோழர்களுக்கும் கூட தேநீர், உணவு பரி மாறுவதில் தயக்கம் காட்டாமல் செயல் படுவது அவரது தனிச்சிறப்பு. மாவட்டக்குழு அலுவலகத்தில் சிலம்பம் பயில வருகின்ற சிறுகுழந்தை களுக்கு காலை நேரத்தில் தேநீர், பிஸ்கட் உள்பட வாங்கிக்கொடுத்து உற்சாகப் படுத்துவதில் உன்னத அன்பை வெளிப் படுத்தியவர். காலை 5.30 மணிக்கு எழுந்து அலுவலக சுற்றுப்புறங்களை கவனித்து செடி, கொடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அலுவலகத்தை மிக நேர்த்தியாக கவ னித்து வந்தவர். கட்சிக்குள் பல நூறு தோழர்கள் பல் வேறு பணிகளில் துடிப்புடன் பணி யாற்றினாலும் அலுவலகத்திற்கென்று முருகேசன் போன்ற தோழர் கிடைப்பது அரிது. அவருக்கு கொடுக்கின்ற எந்த பணியையும் சிறு மறுப்பின்றி உடனடி யாக ஏற்றுக்கொண்டு அந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே. அத்தகைய தோழரின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியும் ஆறா துயர மும் தருகிறது. செவ்வணக்கம் தோழர்
முருகேசன். - இரா.விஜயராஜன் மாநிலக்குழு உறுப்பினர்,சிபிஐ(எம்)