districts

img

கடலாடி கூத்தன்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி போராட்டம்

இராமநாதபுரம், ஜூன் 19- விவசாயிகளின் வாழ்வாதாரமான கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்வாயை சீரமைத்து செல்வனூர் வரை  தண்ணீர் கொண்டு வர வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டு மென வலியுறுத்தி இராமநாதபுரம் கடலாடி தாலுகா கீழ செல்வனூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தாலுகா செயலாளர் எம்.சுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீர் பாசன சங்கத் தலைவர் விவேகானந்தன், நைனா முஹ மது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எம்.முத்து ராமு, மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகனன், டி.நவநீதகிருஷ்ணன், எஸ். ராம சாமி, வி.பெரியசாமி, திகார் சுல்தான், எஸ்.ஆறு முகம், சிக்கல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நூருல் அமீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர்கள் பி.முத்துசாமி, எஸ்.போஸ் சிக்கல் நகர் வாலிபர் சங்க நிர்வாகி அம்ஜத்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.