மதுரை, பிப்.6- மதுரையில் மாற்றுத்திற னாளி அடையாள அட்டை பெற நேரில் வர வேண்டும் எனக் கூறியதால் மின் விபத் தில் காயமடைந்த இளை ஞர் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டார். மதுரை டி.குன்னத் துரைச் சேர்ந்த கருப்பையா -இருளாயி தம்பதியினரின் மகன் இருளப்பன் (20) ஐந்து மாதங்களுக்கு முன்னர் வர் ணம் பூசும் வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கிய தில் ஒரு காலை இழந்தார், காயங்கள் ஆறாத நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த இருளப்பனுக்கு மாற்றுத்திற னாளி அடையாள அட்டை உள்ளிட்ட பிற சலுகைகள் அளிக்க வேண்டுமென 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலு வலரிடம் மனு அளிக்கப்பட் டுள்ளது. அலுவலர்கள் அடையாள அட்டை பெற பாதிக்கப்பட்டவர் நேரில் வர வேண்டும் எனக் கூறி கூறி யுள்ளனர். இதனையடுத்து இருளப்பனை பெற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று அழைத்து வந்த னர். சுமார் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக காத்திருந்த இருளப்பனுக்கு மாற்றுத்திற னாளி அடையாள அட்டை யை மாவட்ட வருவாய் அலு வலர் சக்திவேல் வழங்கி னார். செயற்கைக் கால், சுய தொழில் செய்ய கடனு தவி செய்யப்படும் என அதி காரிகள் உறுதியளித்தனர்.