districts

img

பழனியில் சிஐடியு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்

ஆகஸ்ட் 9 வெள்ளையனே வெளியேறு தினத்தை முன்னிட்டு சுதந்திரம், மதச்சார்பின்மையை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பழனியில் சிஐடியு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது .சிஐடியு கன்வீனர் கே. பிச்சைமுத்து தலைமை வகித்தார். பஞ்சாலை சம்மேளன மாநில துணைத்தலைவர் ஆர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். சாலைப் போக்குவரத்து சம்மேளன மாநிலத் தலைவர் கே. ஆறுமுக நயினார், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.மனோகரன், என். ராமநாதன், ஜி.வெங்கிடுசாமி ஆகியோர் பேசினர்.