மதுரை, மார்ச் 14- மதுரை பழங்காநத்தம் அருகே நேருநகர் பகுதி யில் பாண்டி என்பவருக்கு சொந்தமான பழைய கார் களுக்கான உதிரி பாகங் கள் விற்பனை நிலையம் உள்ளது. இக்கடையில் திங்களன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உட னடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்த னர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரமாக போராடி தீயை அணைத்தனர். விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பழைய கார் உதிரிபாகங்கள், வாகன இன்ஜின்கள், டயர் கள், பெல்டுகள், சீட்டுகள் போன்றவை முழுமையாக எரிந்து நாசமானது. முதற்கட்ட தகவலில் மின்சார கசி வால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற அடிப்படை யில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை யை தொடங்கியுள்ளனர்.