districts

img

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து அறைகள் சேதம்

சிவகாசி, ஜூன்.9- சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறைகள் சேதமாகின. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ளது அனுப்பங்குளம். இங்கு,  ஆறுமுகச்சாமி என்பவருக்கு சொந்தமான வடிவேல் பைரோடெக் என்ற பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்நிலையில், வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது,  பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருட்களை கலக்கும் அறையில் இருந்த  தொழிலா ளர்கள் அறையை விட்டு வெளியே வந்துள்ளனர். இந்தநிலையில், மூலப்பொருட்களில் திடீரென வேதி மாற்றம் ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில்  சில அறைகள் முற்றிலும் தரைமட்டமாகியது. இதில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை.  மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  சிவகாசி தீயணைப்பு வீரர்கள் தீயை மற்ற பகுதிகளுக்கு பரவவிடாமல் தடுத்தனர்.  இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;