districts

img

132 பேர் சென்ற சீன விமானம் விபத்துக்குள்ளானது

ஹாங்காங், மார்ச் 21- சீனாவில் திங்களன்று பிற்பகல் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாக தகவல்களின் (Civil Aviation Administration of China) அடிப்படையில், 132 பேரு டன் சென்ற சைனா ஈஸ்டர்ன் ஏர் லைன்ஸ் ஜெட் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் உள்ள மலையில் விழுந்து நொறுங்கியது. போயிங்-737 ரக விமானம் தென்மேற்கு நகரமான குன்மிங்கிலி ருந்து குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, வுஜோ நக ரில் தொடர்பை இழந்தது. விமா னத்தில் 123 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர் என்று CAAC வெளியிட்டுள்ள ஆன்லைன் அறிக்கை தெரிவிக்கி றது. மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்துள்ளது. விமானத்தில் 133 பேர் இருந்ததாக அரசு ஊடக அறிக்கை தெரிவிக்கிறது சீனாவின் மாநில ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லி பகிர்ந்துள்ள காட்சிகள்  மூலம் மலை, காடுகள் நிறைந்த பகுதியில் இருந்து புகை மூட்டங்கள் தென்பட்டது.  நிகழ்விடத்திற்கு தீயணைப்பு படையினர் 117 பேருடன் 23 தீய ணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குவாங்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து மேலும் 538 தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பப் பட்டுள்ளனர் குவாங்சி  பிராந்திய தீயணைப்புத் துறை  தெரிவித்துள்ளது.