districts

மதுரை முக்கிய செய்திகள்

போலியாக பணி நியமன ஆணையை காட்டி  ரூ 3 லட்சம் மோசடி; ஒருவர் மீது வழக்கு

தேனி, ஜூன் 27- பெரியகுளத்தில் போலியாக பணி நியமன ஆணையை  காட்டி ரூ.3 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்குப் பதிவு  செய்து தேடி வருகிறார்கள். பெரியகுளம் தாமரைக்குளம் வாஞ்சிநாதன் தெருவை  சேர்ந்தவர் ரமேஷ்.இவர் பட்டய படிப்பு படித்துள்ளார். இவரிடம் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக அதே ஊரைச் சேர்ந்த ரத்தினம் மகன் மணிகண்டன் என்ப வர் ரூ.3 லட்சம் கேட்டுள்ளார். அதை நம்பி 23.8.2018 ஆம்  தேதி ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து  பணி நியமன ஆணையை 22.10.2018 ஆம் தேதி தபாலில்  அனுப்பியுள்ளார். பணியில் சேருவதற்கு முன்பு தள்ளி வைக்கப்பட்டதாக கூறி வேலை வாங்கி தராமல் காலம்  தாழ்த்தி வந்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் ,தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தென்கரை காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கொடைக்கானல் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்து 5 பயணிகள் காயம்

தேனி, ஜூன் 27- ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 பேர்  கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்திருந்தனர்.  பல இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு செவ்வாய்க்கிழமை மலைச்சாலையில் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். ஓட்டுநர் அஜய் வண்டியை ஓட்டி வந்தார்.டம்டம் பாறை  அருகே வந்த போது வேன் நிலைதடுமாறி சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில் கிரண் உட்பட 5 பேர் படு காயம் அடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொழிலாளியை கொன்ற  3 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவில்லிபுத்தூர், ஜூன் 27- சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை  சேர்ந்தவர் சுடலை (எ) ராஜ்குமார்(37). இவர் லோடுமேன்  வேலை செய்து வந்தார்.  அதே பகுதியை சேர்ந்த முத்து கிருஷ்ணன்(35), கார்த்திக்ராஜா(35), மணிகண்டன்(36) ஆகியோர் பெண்களை கேலி செய்துள்ளனர். அவர்களை  ராஜ்குமார் கண்டித்ததால் முன்விரோதம் இருந்துள்ளது.  இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி   இரவு முத்துகிருஷ்ணன், கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜ்குமாரை வெட்டி கொலை  செய்தனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துகிருஷ்ணன், கார்த்திக்ராஜா, மணி கண்டன் ஆகியோரை கைது செய்தனர்.  வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள கூடு தல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில்  முத்துகிருஷ்ணன், கார்த்திக்ராஜா, மணிகண்டன் ஆகிய  3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கஜரா  ஆர்ஜிஜி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்னக்கொடி ஆஜரானார்.

மதுரை சக்கிமங்கலத்தில்  சிட்கோ தொழிற்பேட்டை  முதல்வர் தொடங்கி வைத்தார்

மதுரை, ஜூன் 27- ரூ.22.28 கோடி மதிப்பீட்டில் 33.88 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மதுரை சக்கிமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஜூன் 27 அன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில்  பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.22.28 கோடி  மதிப்பீட்டில் 33.88 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ள மதுரை சக்கிமங்கலம் சிட்கோ தொழிற்பேட்டை யை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.இந்த விழா விற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் கிராமத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்திற் கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை  சார்பாக ரூ.22.28 கோடி மதிப்பீட்டில் 33.88 ஏக்கர் பரப்பள வில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப் பட்டுள்ளது.  இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் 5,500 தொழி லாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவர்.

ஆண்டிபட்டியில் பேரூராட்சியில்  திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

தேனி, ஜூன் 27- ஆண்டிபட்டி பேரூராட்சி சார்பில் பிற மாவட்டங்களை சேர்ந்த 8 பேரூராட்சி அலுவலர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது . திடக்கழிவு மேலாண்மையில் மாதிரி பேரூராட்சி களாக மாநில அளவில் ஆண்டிபட்டி பேரூராட்சி உள்ளிட்ட  நான்கு பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . இங்கு  மற்ற பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது.  இதனடிப்படையில் ஆண்டிபட்டியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்  நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர் தலைமை வகித்தார். பேருராட்சி தலைவர் சந்திரகலா தொடங்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கினார். திடக்கழிவுகளை மக்கும், மக்காத குப்பைகளை கையாளுதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட  மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேரூராட்சிகளைச் சேர்ந்த சுகா தார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள், பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்- ஒத்தக்கடை மெட்ரோ ரயில் வழித்தடத்தை அமைப்பதில்  குழப்பம் இல்லை

திட்ட இயக்குனர் பேட்டி

மதுரை, ஜூன் 27-   மதுரையில் ரூ.8500 கோடி திட்ட மதிப்பில்  திருமங்கலம்-ஒத்தக்கடை வரை 31 கிலோ  மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருமங்கலம் நகர் பேருந்து நிலையம் பகுதி யில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படு வது தொடர்பாக ஏற்கனவே மண் பரி சோதனை செய்திருந்த நிலையில் ரயில் நிலை யம் அமைப்பது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் செவ்வாயன்று  ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருமங்கலம் பேருந்து நிலையம் உச்சப்பட்டி துணைக்கோள் நகரம்,  மதுரை ரயில் நிலையங்கள் மற்றும் மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள் ஆகிய வற்றில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிட கூறிய திட்ட இயக்குநர் அர்ஜூன், திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மேற்கொள்ளும் பணிகளில் எந்தவித குழப்பமும் இல்லை.  வைகை அருகே சுரங்க பாதை மேற்கொள் ளம் பொழுது அனைத்தும் பாறைகள் மட்டுமே  இருப்பதனால் எந்த வித அச்சமும் தேவைப்பட வில்லை. புராதன சின்னங்கள் எந்த விதத்தி லும் பாதிக்காத வண்ணம் பாதை வகுக்கப்பட்டு வருகிறது. நில எடுப்பு பணிகளுக்கு உண்டான கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அருகே  மெட்ரோ வழித்தட ரயில் நிலையம் அமைவ தற்கு பரிசீலனை செய்யப்படும். தற்போது முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து  ஒத்தக்கடை வரை மட்டுமே தான் திட்டத்தில்  அமைப்பது குறித்து பணிகள் மேற்கொள்ளப் படும்.  மதுரா கல்லூரி அருகே ரயில்வே கிராசிங்கை கடந்து மேற்கொள்ளப்படும் பணிகள், மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேற்கொள்ளப்படும் பணிகள், வைகை அருகே சுரங்கப்பாதை ஏற்படுத்துவது போன்ற  பணிகள் மட்டுமே மிகுந்த சவாலாக இருக்கி றது என்று கூறினார்.