திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன்பட்டியில் முன்னாள் முதல் வர் காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்த சில அரிய தகவல்கள். சில அறிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மற்றொரு அறையில் புலவர் மார்க்ஸ் தொல் பொருட்களை காட்சிப் படுத்திருந்தார். இவற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடி கள், பழமையான மருத்துவக்குறிப்பு கள், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எடைக்கற்கள். சிலம்பு, போர்க் கருவி கள், பழங்கால ரேடியோ, பழங்கால கிராமப்போன் ரிக்கார்டுகள், டைப் ரைட்டர், நூல் நூற்கப்படும் ராட்டை, பழங்கால நாணயங்கள், பழங்கால ரூபாய் நோட்டுக்கள், தமிழர்கள் போர்க்கருவிகளான பிச்சுவா, கட்டாரி, நெடுவாள், நெடுங்கொண்ட வாள், கத்தி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தொல் பொருள் சேகரிப்பு குறித்து புலவர் மார்க்ஸ் (72) கூறியதாவது:- பொருட்கள் சேகரிப்பை எனது தந்தை யிடமிருந்து கற்றுக்கொண்டேன் தந்தை மாணிக்க வாசகம். பட்டிவீரன்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். பழைய இரும்புக்கடை வைத்தி ருந்த எனது தந்தை இது போன்ற அரிய பொருட்களைச் சேகரிக்க எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பழமையான சிலம்புகளை ஒரு பாத்திரக்கடையில் தனது வாங்கி வந்தார். எந்த ஊருக்குச் சென்றாலும் பழைய இரும்புக்கடைகளுக்குச் சென்று ஏதாவது பழமையான பொருட்கள் உள் ளதா என்று பார்த்து அப்படி கிடைக்கும் அபூர்வமான பொருட்களை வாங்கிச் சேகரித்து விடுவேன். இந்தப் பள்ளியில் ஏலம் விடப்பட்ட கிராம போனை ரூ.1000-க்கு வாங்கி னேன். பழைய கால ரேடியோவை எனது உறவினரிடம் கேட்டுப் பெற்றேன். மரப்பாச்சி பொம்மைகளை பழைய வத்தலகுண்டில் ஒருவரிடமிருந்து பெற்றேன். தந்தை எனக்குக் காரல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தார். எனது பெயரை என் தாயால் சரிவர உச்சரிக்க முடிய வில்லை எனவே சக்திவேல் என்று அழைத்தார். ஆனால், உலகப் பாட்டாளி வர்க்கத் தலைவன் மார்க்ஸ் என்பதால் அவர் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக எனது பெயரை நான் மார்க்ஸ் என்றே வைத்துக்கொண்டேன். ஒரு மியூசியம் வைக்கும் அளவிற்கு தொல் பொருட்களை தேடித் தேடி சேகரித்து வைத்துள்ளேன். பொருட் களை பலர் விலைக்குக் கேட்டனர். நான் கொடுக்கவில்லை. எனக்கு பிறகு இவற்றையெல்லாம் எனது மகன் பாது காப்பார் என்றார். கண்காட்சியில் 1901-ஆம் காலத்திய எடைக்கற்களான ராத்தல், 1940-ஆம் காலத்திய தோலா, மற்றும் பவுண்ட், வீசை எடைக் கற்கள், தாமிரத்தால் செய்யப்பட்டுள்ள பொத்தக்காசு எனப் படும் ஓட்டைக்காசுகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த நாணயங்கள் 1941-1947-ஆம் காலத்தைச் சேர்ந்தவை. 1947-ஆம் ஆண்டு முதல் 1960-ஆம் ஆண்டு காலத்திய கால் அனா, அரை அனா, ஒரு அனா ஆகிய நாணயங்கள், ஐந் தாம் ஜார்ஜ், ஆறாம் ஜார்ஜ் உருவம் பொறித்த ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. தவிர 50 நாடுகளின் ரூபாய் நோட்டுக்களும் காட்சிப்படுத்தப்பட்டி ருந்தது.
இலமு, திண்டுக்கல்