விருதுநகர், மே.19- விருதுநகர் மாவட்டத்தில் பதினோராம் வகுப்பு தேர்வில் 95.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 10ஆயிரத்து 73 மாண வர்களும், 11ஆயிரத்து 721 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 794 பேர் பதினோராம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில், 9ஆயிரத்து 301 மாணவர்கள்(92.34சதவீதம்), 11ஆயிரத்து 444 மாணவிகள்(97.64சதவீதம்) என மொத்தம் 20ஆயிரத்து 745 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 95.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.