districts

img

குமுளி அருகே கோர விபத்தில் 8 பேர் பலி - குடும்பத்தினருக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்

தேனி,டிச.24- தேனி மாவட்டம் , குமுளி மலைப்பாதை யில் ஐயப்ப பக்தர்கள் வந்த  கார் தடுப்புச் சுவரில் மோதி 100அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில்  8 பக்தர்கள் உயி ரிழந்தனர். 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.  தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன்  ஆகியோர்  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரு பவர்களுக்கும், இறந்தவர்களின் உறவி னர்களுக்கும் ஆறுதல் கூறினர். சபரிமலை சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது ஆண்டி பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.