திண்டுக்கல், மே 8- திங்களன்று வெளியான பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழக அளவில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்.நந்தினி வாழ்த்து மழையில் நனைந்தார். மாணவி நந்தினியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும் தீக்கதிர் நாளிதழின் முதன்மைப் பொது மேலாளருமான என்.பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் அழகர்ராஜா, மாநகர் செயலாளர் ஏ.அரபுமுகமது, நகர்க்குழு உறுப்பினர்கள் சி.பி.ஜெய சீலன், என்.கிருஷ்ணன், விஷ்ணுவர்தன், கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜோதிபாசு, மாரியம்மாள், ஆகியோர் மாணவி நந்தினிக்கு சால்வை அணி வித்தும், புத்தகம் கொடுத்தும் பாராட்டு தெரிவித்தனர். வாலிபர், மாதர், மாணவர் அமைப்புகள் பாராட்டு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட் டச்செயலாளர் தீபக்ராஜ், மாவட்டத்தலை வர் முகேஷ், மாவட்டத் துணைச்செயலா ளர் தமிழ்செல்வன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, நகரத்தலைவர் அஜீத் குமார், நகர் செயலாளர் பிரேம்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச்செயலாளர் வே.பாப்பாத்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜெயந்தி ஆகி யோர் மாணவி நந்தினியை பாராட்டினர்.