districts

img

இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணை கரையை பலப்படுத்தி, வாய்க்கால்களை தூர்வாருக!

18 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறுமா?

சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிரா மப்பகுதிகளில் உள்ள போயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அணையின் முன்பு  குடில் அமைத்து தங்கி அணையின் கட்டுமானப்பணி யில் ஈடுபட்டனர். 2005 ம் ஆண்டு பெருமழை வெள்ளம் ஏற்பட்டபோது உடைமைகளை இழந்து பசி பட்டினியோடு இருக்க இடமின்றி தவித்து வந்தனர்.  அப்போதை ஊராட்சி மன்ற தலைவர் செல்ல முத்து என்பவர் தனது சொந்த நிலமான 3 ஏக்கர் நிலத்தை 100 குடும்பங்களுக்கு கொடுத்து உணவு, உடை, குடிநீர், மின்விளக்கு வசதி மற்றும் வீடுகள் கட்டிக் கொடுத்ததால் அந்த மக்கள் இங்கேயே வசித்து வருகின்றனர்.  இதுகுறித்து விவசாயி முனியசாமி என்பவர் கூறு கையில், இடையக்கோட்டை நங்காஞ்சியாறு தடுப்பணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இடையக்கோட்டை, வலையபட்டி, கரூர் மாவட்டத்தில் குறிக்காரன்வலசு,

பழனிக்கவுண்டன்வலசு, குரும்பட்டி ஆகிய ஊர்களில் வழியாக 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு வலதுபுற மேல்மட்ட வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்கல் அமைத்து பல வருடங்கள் ஆகிறது என்பதால் செடிகொடிகள் வளர்ந்தும் பாறைகள் நிறைந்ததாக உள்ளதால் தண்ணீர் அந்த வாய்க்கா லில் வருவதில்லை. நங்காஞ்சியாறு அணையின் கரையை பலப்படுத்தி, அணையில் இருந்து விவசாய பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விடும் 4 கால் வாய்களையும் தூர் வாரினால்தான் கடைமடை வரை தண்ணிர் செல்லும். விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.  விவசாயி மணிகண்டன் என்பவர் கூறுகையில், 1991 ஆம் ஆண்டு வாய்க்கால் அமைப்பதற்காக அர சின் சார்பில் 70 விவசாயிகளிடம் இருந்து நிலம்  எடுக்கப்பட்டது. அதற்கு இழப்பீடு தொகை சுமார் ரூ 4 கோடிக்கு மேல் அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளதால் வாய்க்காலுக்கு நிலம் வழங்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். விவசாயி பரஞ்ஜோதி என்பவர் தெரிவிக்கையில், இடையக்கோட்டை நங்காஞ்சியாறு தடுப்பணை வாய்க்காலை தூர் வாரவேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை விடுத்தும் எந்த அரசு வந்தாலும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்றார். 

ஒட்டன்சத்திரம், ஜூன் 11-  திண்டுக்கல், கரூர் மாவட்டத்  திற்கு பயன்பெற்று வரும் இடை யக்கோட்டை நங்காஞ்சியாறு அணை கரையை பலப்படுத்தி, வாய்க்கால்களை தூர் வாரவேண் டும் என்று விவசாயிகள் எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகை யில் மலை முகடுகளுக்கு இடையே ரம்மியமாக அமைந்துள்ளது, பரப்பலாறு அணை. கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பாச்சலூர், வட காடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறு ஓடை  ஆறாக மாறி வடகாடு மலைக்கிரா மத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வருகிறது.  இந்த அணை முற்றிலும் கருங்கற் களால் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மொத்தம் உயரம் 90 அடி ஆகும். கடந்த 1975 ஆம்  ஆண்டு அப்போதைய முதலமைச்  சர் கருணாநிதியால் திறக்கப்பட் டது இந்த அணை. திண்டுக்கல், கரூர் ஆகிய 2 மாவட்டங்களின் முக்கிய நீராதா ரமாக பரப்பலாறு அணை உள் ளது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் பரப்பலாறு அணை தனது முழுக்கொள்ளளவான 90 அடியை எட்டியவுடன் அணையில்  இருந்து உபரிநீர் வெளியேற்றப் படும்.

மேலும் ஒட்டன்சத்திரம் நக ராட்சி பகுதிகள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை விளங்குகிறது. இதுதவிர  ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள  பெரியகுளம், முத்துபூபால சமுத்திரகுளம், சடையகுளம், செங்குளம், ராமுசமுத்திரகுளம், ஜவ்வதுபட்டி பெரியகுளம் ஆகிய பெரிய கண்மாய்களுக்கு பரப்ப லாறு அணையில் இருந்து தண் ணீர் செல்கிறது. இதேபோல் நங்  காஞ்சியாற்று படுகையில் விருப் பாச்சி முதல் ஜவ்வாதுபட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் நீரா தாரமாக உள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும்போது, கண்மாய்கள் நிரம்பி இடை யக்கோட்டை வழியாக கரூர் அமரா வதி ஆற்றுக்கு தண்ணீர் சென்று வீணாக கலந்தது. இடையக்கோட்டை நங்காஞ்சி யாறு வெறும் ஆறாக இருந்தது. ஜமீன் தானமாக கொடுத்த நிலத்தில் கடந்த 1989 ஆம் ஆம் ஆண்டு  அடிக்கல் நாட்டப்பட்டு இடையக் கோட்டையில் அணை கட்ட தொடங்கப்பட்டது.

ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றது. அணை கட்டுமா னப்பணி நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது கடந்த 2005 ஆம் ஆண்டு பலத்த மழை பெய்து ஆற்  றில் தண்ணீர் அதிகளவு வந்ததால் அணையின் இடதுபுற கரை உடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறியது. அணையின் கரை உடைந்தது மட்டுமல்ல விவசாயிகளின் எதிர் கால கனவும் கலைந்தது. அதன்பிறகு கரைகள் கட்டு மானப்பணி முழுமையடைந்து 2006 ஆம் ஆண்டு அணை திறக்கப் பட்டது.  இதன் பின்னர் பெய்த மழை யில் இடையக்கோட்டையில் நங் காஞ்சியாறு அணையில் மொத்த கொள்ளளவு 39.7 அடி தண்ணீர் நிரம்பி வழிந்து  இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 615 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.  இந்த அணையால் கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் பகுதியில் 3 ஆயிரத்து 635 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  அதன்படி திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் மொத்தம் 6 ஆயிரத்து 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 4 கால்  வாய்கள் செல்கிறது. அனைத்து கால்வாய்களும் புதர்மண்டி பராமரிப்பு இன்றி உள்ளது. அணையை சுற்றியுள்ள கரை களை பலப்படுத்தி, கால்வாய் களை சீரமைத்து கடைமடைவரை தண்ணீர் செல்வதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.