சாத்தூர், நவ.4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 42 ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு சாத்தூர் ஒன்றியம் முத்தால் நாயக்கன்பட்டியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்தால்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் நிர்மல் தலைமையேற்றார். ஒன்றிய செய லாளர் வீரஅருண்பாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மனோபிரியா மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மாவட்டத் தலைவர் கருப்ப சாமி சிறப்புரையாற்றினார். மேலும் இதில், அன்டர்சன், சிவா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். விருதுநகர் பாத்திமா நகரில் நகரத் தலைவர் எம்.பொன்பாண்டி தலைமையில் மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் இதில், நகரச் செயலாளர் தீபக் குமார், சத்திய ஜித், விஜயபாரதி, மாரிக்கனி, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.