districts

img

மதுரை அருகே 40 மயில்கள் பலி வனத்துறையினர் விசாரணை

மதுரை, மார்ச் 7-  மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே பூலாங் குளம் கிராமம் உள்ளது. இங்குள்ள வயல் பகுதியில் சில  இடங்களில் கடைசிக் கட்ட விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கண்மாய்கரை மற்றும் கருவேல் மரங்கள் நிறைந்த இடத்தில் மயில்கள்   இறந்து கிடந்தன. இதுகுறித்து விவசாயிகள் காவல்துறை யினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  இறந்துகிடந்த 40 மயில்களின் உடல்களை கைப்பற்றினர்.  மேலும் வனத்துறையினர் மயில்களை தேடி வருகின்ற னர். இப்பகுதியில் விவசாயம் நடைபெறுவதால் பயிர்  களை பாதுகாக்க மருத்து வைத்திருக்கலாம் என முதற்  கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் விசா ரணை முடிந்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என வனத்துறையினர் கூறினர். மதுரை மாவட்டத்தில் கடந்த  சில வருடங்களுக்கு முன் சூர்யா நகர் அருகே 42 -க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்தன.